ஆட்டோ டிரைவர் கிட்ட நண்பர் மாதிரி பேசிட்டு போய் இருக்காரு! வைத்திருக்கும் சொகுசு கார்கள் ஏராளம்!
பிரபலங்களும், பில்லியனர் தொழிலதிபர்களும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்பவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. விலையுயர்ந்த கார்கள் மற்றும் கேரவன்களில் அவர்கள் பயணிப்பதை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்திருக்கிறோம். இருப்பினும், சில சமயங்களில் இந்த பிரபலங்கள் ஆடம்பரம் இல்லாத சாதாரண வாகனங்களில் நிகழ்ச்சிகளுக்கு வருவதும் உண்டு. அப்படியான ஒரு நிகழ்வாக, மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் (Mohanlal) மற்றும் பில்லியனர் தொழிலதிபர் எம்.ஏ.யூசுப் அலி (M.A Yusuff Ali) ஆகியோர் ஒரு ஆட்டோரிக்ஷா (Autorickshaw) வாகனத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு வருகை தந்துள்ளனர்.
இதுதொடர்பான வீடியோவை ஷியாம் போட்டோகிராபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், நீல நிற எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவைச் சுற்றி ஏராளமான மக்கள் ஓடுவதைக் காணலாம். அவர்களில் சிலர் தனிப்பட்ட பாதுகாப்பு ஊழியர்கள் போன்று இருக்கின்றனர். காணொளியில், ஆட்டோரிக்ஷா நெருங்க நெருங்க, ஏன் மக்கள் அதைத் துரத்தி ஓடினார்கள் என்பது தெளிவாகிறது.

ஏனெனில், அந்த ஆட்டோவினுள் இரண்டு பிரபலமான ஆளுமைகள் இருந்தனர். ஒருவர், மலையாளத் திரையுலகின் நட்சத்திர நடிகர் மோகன்லால், மற்றொருவர், லூலு குரூப் இன்டர்நேஷனல் (Lulu Group International) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எம்.ஏ.யூசுப் அலி ஆவார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு இருவரும் எளிமையாகவும், அதேநேரம் கவனம் ஈர்க்கும் வகையிலும் ஆட்டோரிக்ஷாவில் வந்துள்ளனர்.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடைந்த பின், நடிகர் மோகன்லால் ஆட்டோ ஓட்டுநரிடம் வாகனத்தை நிறுத்தும்படி கூறி, இறங்குவதற்கு முன் சில நொடிகள் அவரிடம் பேசினார். இறங்கிய பிறகும் அவர் தொடர்ந்து உரையாடிவிட்டு, பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் மேடையை நோக்கி நடந்தார். நட்சத்திரத்தைப் பார்க்க ஏராளமான மக்கள் குவிந்திருந்ததால், தனிப்பட்ட பாதுகாப்பு ஊழியர்கள் அவர்களைச் சூழ்ந்திருந்தனர்.

மோகன்லால் புதிய தோற்றத்தில், மீசையுடன் மட்டுமே தோன்றினார்; தாடி இல்லை. இது அவரது வரவிருக்கும் திரைப்படத்திற்கான தோற்றமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. அதில் அவர் ஒரு காவல்துறை அதிகாரியின் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளது. நடிகர் மோகன்லாலும், யூசுப் அலியும் தங்கள் சொந்த வாகனங்களில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
பிறகு, பார்க்கிங் பகுதியில் இருந்து, அல்லது அவர்களின் கார்கள் அவர்களை இறக்கிவிட்ட இடத்தில் இருந்து, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்ல, ஆட்டோரிக்ஷாவை பயன்படுத்தியுள்ளனர். மோகன்லாலும், தொழிலதிபர் யூசுப் அலியும் மாத்ருபூமி சர்வதேச இலக்கிய விழா 2026 (MBIFL) நிகழ்வில் கலந்துகொள்ள வந்ததாகத் தெரிகிறது.

காணொளியில் காணப்படும் ஆட்டோரிக்ஷா ஆனது பியாஜியோ ஏப் எலக்ட்ரிக் (Piaggio Ape Electric) ஆட்டோ வகையைச் சேர்ந்தது. இது இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஒரு வேரியண்ட்டிற்கு வாகனத்தில் இருந்து கழற்றக்கூடிய பேட்டரியும், மற்றொன்றிற்கு எளிதில் கழற்ற முடியாத நிலையான பேட்டரி யூனிட்டும் வழங்கப்படுகின்றன. நிலையான பேட்டரி கொண்ட வேரியண்ட் ஆனது 8 kWh பேட்டரி பேக்கால் இயங்குகிறது.
இது அதிகப்பட்சமாக 10 பிஎஸ் ஆற்றலையும், 30 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. இந்த பியாஜியோ எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவில் ஓட்டுநருடன் சேர்த்து மூன்று பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். மேலும், இதன் பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக சுமார் 150 கிமீ தூரம் வரை இயங்கக்கூடியது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மோகன்லால் மற்றும் யூசுப் அலி இருவரிடமும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls-Royce Cullinan) உள்பட பல விலையுயர்ந்த கார்கள் மற்றும் எஸ்யூவிகள் உள்ளன. குறிப்பாக, பில்லியனர் தொழிலதிபரான யூசுப் அலி லக்சரி கார்கள் மட்டுமின்றி, ஹெலிகாப்டர்கள் மற்றும் தனிப்பட்ட ஜெட் விமானங்களுக்கான உரிமையாளரும் ஆவார்.
இத்தகையவர்கள் தான் தற்போது எளிமையாக ஆட்டோரிக்ஷாவில் பயணம் செய்துள்ளனர். ஒருவேளை இது விளம்பரத்தை தேடிக்கொள்ளும் அவர்களது முயற்சியாக கூட இருக்கலாம். எது எப்படியோ இதன் மூலமாக எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவும் கவனத்தை பெற்றுள்ளது. கமர்ஷியல் வாகனங்கள் பிரிவில் எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாக்கள் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.


Click it and Unblock the Notifications









