ஆ... ஊ....ன்னு சொன்னாங்க! கடைசியில ஒன்னுமே இல்லாம வெத்து காகிதமாக மாறி போன பட்ஜெட்!
மத்திய அரசு இன்று தனது 2026-27ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் செக்டாரில் எதிர்பார்ப்புகள் என்ன? என்னென்னஅறிவிப்புகள் வெளியானது? கோரிக்கை எல்லாம் நிறைவேற்றப்பட்டதா? முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் இன்று மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்தது. இதில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட எந்த அறிவிப்புகளும் இல்லை என்ற விமர்சனம் இருக்கிறது.இந்நிலையில் ஆட்டோமொபைல் செக்டாரில் என்னென்ன எதிர்பார்ப்புகள் இருந்தது என்ற விபரங்களை காணலாம்.

முதலில் மத்திய பட்ஜெட்டில் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்கள் மிகப்பெரிய அளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுவதால் இதை கண்காணிக்க சூப்பர் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் வாகனத்தின் சார்ஜர் இருக்கும் இடம் உள்ளிட்ட சில தகவல்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லைஅதே நேரம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மோட்டார் தயாரிப்பில் பெர்மனன்ட் மேக்னட் தயாரிப்பிற்கு தமிழ்நாடு, கேரளா, ஓடிசா உள்ளிட்ட மாநிலங்களை காரிடாராக அறிவித்துள்ளது. இந்த மாநிலங்களில் உள்ள தனிமங்களை எடுத்து மேக்னட்களை தயாரிக்கும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வாகன தயாரிப்பில் செமி கண்டெக்டர் தட்டுபாடு அதிக அளவில் நிலவி வந்தது. இதனால் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல இந்தியாவில் செமி கண்டெக்டர் துறைக்காக ரூ40,000 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
அடுத்ததாக பிஎம் - இ டிரைவ் என்ற வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் விரவாக்கம் செய்யப்படுவது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பிற்கு மானியங்கள் மற்றும் சலுகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கபட்டது. பெரிய அளவில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லை.
அதே நேரம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மோட்டார் தயாரிப்பில் பெர்மனன்ட் மேக்னட் தயாரிப்பிற்கு தமிழ்நாடு, கேரளா, ஓடிசா உள்ளிட்ட மாநிலங்களை காரிடாராக அறிவித்துள்ளது. இந்த மாநிலங்களில் உள்ள தனிமங்களை எடுத்து மேக்னட்களை தயாரிக்கும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வாகன தயாரிப்பில் செமி கண்டெக்டர் தட்டுபாடு அதிக அளவில் நிலவி வந்தது. இதனால் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல இந்தியாவில் செமி கண்டெக்டர் துறைக்காக ரூ40,000 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்பு கடந்த செப்டம்பர் மாதம் அமலுக்கு வந்ததால் பெரும் அளவிற்கு பலன் பெற்றுள்ளது. இதனால் அடுத்த சில மாதங்களில் வேறு அறிவிப்புகள் வரலாம். தற்போது பெரிய அளவில் அறிவிப்புகள் இல்லை. அடுத்த பட்ஜெட் நிச்சயம் ஆட்டோமொபைல் துறைக்கு சூப்பர் பட்ஜெட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








