பெரும் எதிர்பார்ப்புடன் ப்ராங்க்பர்ட் ஆட்டோ ஷோ துவங்கியது

ஜெர்மனி தலைநகர் பிராங்க்பர்ட்டில் ஆண்டுதோறும் சர்வதேச ஆட்டோ ஷோ நடந்து வருகிறது. இந்த நிலையில், 64வது ஆண்டுகளாக நடைபெறும் இந்த ஆட்டோ ஷோ நேற்று துவங்கியது.
கடந்த 2009ம் ஆண்டைவிட இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதலான இடவசதியுடன் இந்த ஆண்டு ஆட்டோ ஷோ நடக்கிறது. மொத்தம் 32 நாடுகளை சேர்ந்த 1,007 நிறுவனங்கள் கண்காட்சியில் பங்குபெற்றுள்ளன.
இந்த கண்காட்சியில் லம்போர்கினி, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் உள்பட 89 கார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. மொத்தம் 13 நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் கான்செப்ட் மாடல்கள் உள்பட 90 புதிய கார் மாடல்கள் இதில் அறிமுகம் செய்யப்படுகின்றன.
ப்ராங்க்பர்ட் ஆட்டோ ஷோவை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பார்வையாளர்களும், ஆட்டோமொபைல் வல்லுனர்களும் பார்வையிட வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
(ப்ராங்க்பர்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்படும் கான்செப்ட் மாடல்கள் மற்றும் புதிய கார்கள் பற்றிய சிறப்பு தகவல்களை தொடர்ந்து வழங்க இருக்கிறோம்)


Click it and Unblock the Notifications








