ஜீப் பிரிமியம் எஸ்யூவிகள் பிப்-3ல் இந்தியாவில் அறிமுகமாகிறது
ஜீப் பிராண்ட், இந்திய வாகன சந்தைகளில் தங்களின் பிரவேசத்தை 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஜீப் பிராண்ட் இந்தியாவில், 3 பிப்ரவரி 2016 செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. தங்களின் அனைத்து தயாரிப்புகளையும் இதே தேதியில் அறிமுகம் செய்ய உள்ளது.

ஜீப் பிராண்ட்டின், தி கிராண்ட் சிரோக்கே மற்றும் ராங்க்ளர் ஆகிய மாடல்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யபடுகிறது. 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு பிறகு, பல்வேறு புதிய தயாரிப்புகளும் அறிமுகம் செய்யபட உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
முன்னதாகவும், பல்வேறு முறை தங்களின் தயாரிப்புகளையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய ஃபியட் கிரைஸ்ளர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் முயற்சித்து வந்தது.
ஆரம்ப கட்டத்தில், ஃபியட் கிரைஸ்ளர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் தங்களின் மாடல்களை, சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் (முழுவதும் கட்டி முடிக்கபட்ட கார்கள்) வடிவிலேயே அறிமுகம் செய்ய உள்ளது.

தேவைகளை பொருத்து, இந்தியாவிலேயே அசம்பிள் செய்யபடும் சொகுசு எஸ்யூவிகளை அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. ஜீப் பிராண்டில், இந்திய சந்தைகளுக்கு என பிரத்யேகமான மாடல்களும் தயாரிக்கபட உள்ளது.
சமீபத்தில், ஜீப் வாகனங்களை வாங்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக பிரவியூ நடத்தபட்டது. ஜீப் பிரண்ட், தி கிராண்ட் சிரோக்கே மற்றும் ராங்க்ளர் ஆகிய மாடல்களை 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலேயே அறிமுகம் செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இந்த இரு மாடல்களும், சர்வதேச சந்தைகளுக்கு வழங்கபடுவது போன்றே இந்திய சந்தைகளுக்கும் வழங்கபட உள்ளது.


Click it and Unblock the Notifications



























