ஹோன்டா உற்பத்தி குறைப்பு

சர்வதேச சந்தையில் ரூபாயின் வீழ்ச்சி, முன்னணி நிறுவனங்களின் சம்பள குறைப்பு போன்றவை நடுத்தர மக்களின் கார் வாங்கும் ஆசையை தள்ளி வைத்துள்ளது. காருக்கான தேவை குறைந்ததை அடுத்து ஹோன்டா நிறுவனம் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளது.
தினமும் இரண்டு ஷிப்ட் முறையில் 380 கார்கள் வரை தயாரிக்கும் திறண் கொன்ட ஹோன்டா தொழிற்சாலையில் தற்போது தினமும் ஒரு ஷிப்ட் வேலை மட்டுமே நடக்கிறது. பாதிக்கு பாதி உற்பத்தி குறைக்கப்பட்டு வெறும் 200 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இப்படி ஒரு பக்கம் கார் உற்பத்தி குறைக்கப்பட்டாலும், மறுபக்கம் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தங்களின் புதிய மாடலான 'ஜாஸ்' வெளி வருவதில் எந்த சிக்கலும் இல்லை. கார் தயாரிப்பு அடுத்த 6 மாதங்களுக்கும் இதே போல் தான் செல்லும் அதில் என்கிறது அந்நிறுவனத்தின் நிர்வாகம்.


Click it and Unblock the Notifications








