ஸ்கோடாவின் புதிய மாடல்கள்

அமோக விற்பனை காரணமாக ஸ்கோடா நிறுவனம் பேபியாவில் மேலும் மூன்று மாடல்களை தயாரித்து இந்தியாவில் விற்க திட்டமிட்டுள்ளது. அதில் விளையாட்டு பிரியர்களுக்கான பேபியா ஸ்போர்ட்ஸ் லைன் கார்கள் 1.8 லிட்டர் என்ஜினுடன் வருகிறது.
பேபியா கேம்பி, ரூம்ஸ்டர் ஆகிய மாடல்களும் வெளிவர இருக்கின்றன. இதையடுத்து இந்தியாவில் ஸ்கோடா தயாரிப்புகளை வாங்க விரும்புவர்களுக்கு தேர்வு செய்ய கூடுதல் மாடல்கள் கிடைத்துள்ளன. இதைத் தவிர லாவ்ரா மாடல் கார்கள் எப்போது வேண்டுமானாலும் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என தெரிகிறது.
அத்தோடு மேலும் பல சிறப்பு அம்சங்களை சேர்த்து, யட்டி என்ற புதிய மாடலை இந்திய சந்தையில் விடவும் அந்த நிறுவனம் தி்ட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








