ஹூண்டாய்க்கு சிறந்த ஏற்றுமதியாளர் விருது!

கார் உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாமிடம் வகிக்கிறது ஹுண்டாய். பல்லாயிரம் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
கார் உற்பத்தியை துவங்கிய 10 ஆண்டுகளில் ஹுண்டாய் நிறுவனம், 10 லட்சம் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்தது. மொத்த உற்பத்தியில் 45 சதவீத கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த 2008-09ம் ஆண்டுக்கான சிறந்த ஏற்றுமதியாளருக்கான 'நிர்யத் ஸ்ரீ தங்கம்' மற்றும் வெள்ளி விருதுகளுக்காக ஹுண்டாய் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
டெல்லியில் நடந்த விழாவில், மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, விருதுகளை வழங்கினார். ஹுண்டாய் நிறுவன மார்க்கெட்டிங் இயக்குனர் அர்விந்த் சக்சேனா இந்த இரண்டு விருதுகளையும் பெற்றுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications








