போர்டு பிகோ கார், 2011ம் ஆண்டின் இந்தியக் காராக தேர்வாகியுள்ளது.

ஏசியை ஆன் செய்வுடன் குளிரான சூழலை இதில் அனுபவிக்க முடியும். எரிபொருள் எச்சரிக்கை அமைப்பில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது பிகோவில். நாம் செல்லும் வேகம் சரியானதா என்பதை அறிய ஆடியோ வால்யூம் வசதியும் இதில் உள்ளது. இதன் மூலம் அதிவேகமாக போனால் ஒரு வித ஒலியையும், மிதமான வேகத்தில் செல்லும்போது அதற்கான ஒலியையும் நாம் கேட்டு அதற்கேற்ப நமது வேகத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.
பிகோவின் முக்கிய அம்சங்களில் இன்னொன்று, வாட்டர் வாஷ் முடிந்த ஐந்து விநாடிகளில் காரின் வின்ட்ஸ்கிரீனில் ஒரு சொட்டு ஈரம் கூட இல்லாமல் உலரும் வசதி.
காரை செலுத்தியபடியே செல்போன்களைக் கையாள இந்தக் காரில் ஏகப்பட்ட வசதிகள் உள்ளன. செல்போன்களின் மைக், கார் ஸ்பீக்கர்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால் போனை கையில் எடுக்காமலேயே நாம் பேச முடியும். கடைசியாக டயல் செய்த பத்து எண்கள், கடைசியாக நமக்கு வந்து 10 எண்கள், மிஸ்டு கால்கள், குறிப்பிட்ட எண்ணை, போனைத் தொடாமலேயே டயல் செய்வது உள்பட பல வசதிகள் இதில் அடக்கம்.
போர்டு நிறுவனத்தின் உலகளாவிய கைனெட்டிக் டிசைனின் தத்துவத்தில் போர்டு பிகோவின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. காரின் கண்ணாடிகள், கதவுள், ரியர் வியூ மிர்ரர் உள்ளிட்ட அனைத்தும் உலகத் தரம் கொண்டவை.
இத்தனை சிறப்பம்சம்ங்களுடன் கூடியதால்தான் பிகோ 2011ம் ஆண்டின் இந்தியக் காராக தேர்வாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








