மூலப் பொருட்கள் விலை உயர்வு எதிரொலி: விரைவில் கார்களின் விலை உயரும்

ஸ்டீல், ரப்பர் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்திருப்பதையடுத்து கார் விலை 1.5 முதல் 2 சதவிகிதம் உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஹுன்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
ரப்பர் மற்றும் செம்பின் விலை இரண்டுமடங்காக அதிகரித்துள்ளதால் ஜெனரல் மோட்டார்ஸ் கார்களின் விலையை 3 சதவிகிதம் உயர்த்துகிறது.
டாடா மோட்டார்ஸ் மற்றும் மாருதி கார்களின் விலை 2 முதல் 3 சதவிகிதம் வரை உயரவிருக்கிறது. டாடா நானோ, அரியா கார்களின் விலைகளில் பெரிய மாற்றம் இருக்காது. டொயோடா மற்றும் ஹோன்டா சீல் மூலப் பொருட்களின் விலை உயர்வு, அமெரிக்க டாலர் மற்றும் என் ஆகியவற்றின் விலை மாற்றம் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








