2011ல் பல புதிய கார்களை அறிமுகப்படுத்தும் டாடா

டாடாவின் முதலாவது கிராஸ்ஓவர் கார்தான் இந்த ஏர்யா. முற்றிலும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடியது இந்தக் கார். இந்த தொழில்நுட்பத்தை தனது மேலும் சில படைப்புகளுக்கு பயன்படுத்தவுள்ளது டாடா.
ஏர்யா தொழில்நுட்பத்துடன், புதிய எஸ்யுவி ஒன்றையும், புதிய பிக் அப் டிரக்கையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக அது தெரிவித்துள்ளது.
மேலும் ஏர்யாவை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது டாடா.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸின் யுவி பிரிவின் சக்சேனா கூறுகையில், சார்க் நாடுகளுக்கு ஏர்யாவை ஏற்றுமதி செய்வது குறித்து யோசித்து வருகிறோம். தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பாவும் எங்களது மனதில்உள்ளது. எங்களது திறனை மேலும் ஆணித்தரமாக வெளிக்காட்ட இது உதவும் என்றார்.
டாடாவின் பயணிகள் வாகனங்களின் விற்பனை அளவு இந்த ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் கால கட்டத்தில் 21 சதவீதம் அதிகரித்து, 1.54 லட்சம் கார்களாக உள்ளது. மேலும், இந்தியாவில் இப்பிரிவில் டாடா மோட்டார்ஸின் பங்கு மட்டும் 22 சதவீதமாகும்.
Tata to launch more cars in 2011
After launching the Aria, Tata is gearing up to launch many products in 2011. Aria - Tata's first crossover is built on completely new platform. This new platform will be used for many new vehicles in the future. Tata is also believed to be working on exporting Aria to many countries.


Click it and Unblock the Notifications








