இந்தியாவில் உற்பத்தியை இருமடங்காக்கும் மெர்சிடிஸ்!

கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் விற்பனை, கடந்த ஆண்டைக் காட்டிலும் 78.5 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் 3827 கார்கள் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெய்ல்மர் ஏஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ வில்பிரட் ஆல்பர் கூறுகையில், " இந்தியர்களின் மனோபாவம் பெரிதாக மாறியிருக்கிறது. இப்போது அதிக அளவு மெர்சிடிஸ் பென்ஸ் தேவைப்படுகிறது இந்தியச் சந்தைக்கு. சம்பளம் நல்ல உயர்வு கண்டுள்ளது... பொருளாதாரமும் வளர்ந்துள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம்.." என்றார்.
உற்பத்தியை இரட்டிப்பாக்கும் பொருட்டு, பூனாவில் உள்ள இந்த நிறுவனத் தொழிற்சாலையில் இரவு நேரப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக வில்பிரட் தெரிவித்தார்.
மேலும் இந்தியர்களின் வருவாய்க்கேற்ற, சி ரக கார்களையும் விரைவில் டெய்ல்மர் அறிமுகப்படுத்த உள்ளது.


Click it and Unblock the Notifications








