எஞ்ஜின் கோளாறு: 21 லட்சம் கார்களை திரும்பப் பெறும் நிஸ்ஸான்!

ஜப்பானின் முன்னணி கார் உற்பத்தியாளரான நிஸ்ஸான் உலகமெங்கும் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவிலும் சென்னை உள்ளிட்ட மூன்று இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன.
ஆனால் இந்த நிறுவனத்தின் கார்களில் சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கான புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன. 2003 முதல் 2006 வரை தயாரிக்கப்பட்ட நிஸ்ஸானின் க்யூப், மார்ச் மற்றும் டைடா ஆகிய மாடல் கார்களில் தொடர்ந்து எஞ்ஜின் கோளாறு குறித்த புகார்கள் வருவதாகவும், இது தொடர்பாக அந்தக் கார்களை திரும்பப் பெற முடிவெடுத்திருப்பதாகவும் முன்பே கூறியிருந்தது.
அதன்படி, ஓடும்போதே, எஞ்ஜின் திடீரென்று நின்றுவிடுவதாக புகார் கூறப்பட்ட 21 லட்சம் கார்களை உடனடியாகத் திரும்பப் பெறுகிறது.
இவை அனைத்தும் ஜப்பானில் விற்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








