மிட்சுபிஷியின் அவுட்லேண்டர்!

பிஎஸ் 3 (பாரத் ஸ்டாண்டர்டு 3) எரிபொருளைப் பயன்படுத்தி, பிஎஸ் 4 சுற்றுச் சூழல் தரக்கட்டுப்பாட்டுக்குட்பட்டு வரும் ஒரே சொகுசு கார் இந்தியாவில் அவுட்லேண்டர் மட்டுமே.
டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் இந்த ஏப்ரல் முதல் பிஎஸ் 4 தரசே சோதனைகளுக்குட்பட்ட கார்கள் மட்டுமே விற்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம். இந்தியாவில் பிஎஸ் 4 தரச்சான்று பெற்ற முதல் கார் அவுட்லேண்டர் மட்டுமே.
டெல்லியில் ரூ 19.95 லட்சமாகவும், பிற பகுதிகளில் ரூ 20.75 முதல் ரூ 21 லட்சமாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள அவுட்லேண்டர், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் - மிட்சுபிஷியின் 2010 தயாரிப்பாகும்.
"முழுக்க முழுக்க சுற்றுச் சூழல் விதிகளுக்குட்பட்ட இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இப்படித் தயாராகியுள்ள முதல் கார் அவுட்லேண்டர்தான் என்பதில் எங்களுக்குப் பெருமை" என்கிறார் இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரவி சந்தானம்.


Click it and Unblock the Notifications








