ஃபெராரி கார்கள் விரைவில் இந்தியா வருகை!பராக்...பராக்...

இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஃபெராரி நிறுவனம் சொகுசு கார்கள் மற்றும் பந்தய கார்கள் தயாரிப்பதில் உலகப் புகழ்பெற்ற நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனத்தின் சொகுசு கார்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் பலத்த வரவேற்பு உள்ளது.
இந்தியாவின் சொகுசு கார் சந்தையின் விற்பனை வளர்ச்சியை கண்டு வியந்த ஃபெராரி, தனது கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. கார் இறக்குமதியில் சிறந்து விளங்கும் ஷ்ரேயான்ஸ் நிறுவனத்தை அதிகாரப்பூர்வ இறக்குமதியாளராக ஃபெராரி நியமித்துள்ளது.
டில்லியில் முதல் கார் ஷோரூமை விரைவில் திறக்கவுள்ள ஃபெராரி, இந்த ஆண்டு மத்தியில் மும்பையில் இரண்டாவது ஷோரூமை திறக்கவும் முடிவு செய்துள்ளது. ஃபெராரி கலிஃபோர்னியா,458 இட்டாலியா, 599 ஜிடிபி ஃபியரானோ மற்றும் FF உள்ளிட்ட மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஃபெராரி திட்டமிட்டுள்ளது.
மேலும், விற்பனையை அதிகரிக்கவும், ஃபெராரியின் சேவை கிடைக்கும் விதத்திலும் இந்தியா முழுவதும் டீலர்களை நியமிக்கும் எண்ணமும் ஃபெராரிக்கு உள்ளது. ரூ.2.2கோடி முதல் ஃபெராரி கார்கள் கிடைக்கும் என்று ஷ்ரேயான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








