புதிய கார்களுக்கு 95% இந்திய பாகங்களை பயன்படுத்த ஜிஎம் முடிவு

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது.
செவர்லே பிராண்டில் ஜெனரல் மோட்டார்ஸ் தயாரித்து வரும் கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
மேலும், அதிக கார் மாடல்களையும் தனது கைக்குள் வைத்திருப்பதால், அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில், சந்தை போட்டியை சமாளிக்கும் விதமாக அடுத்தடுத்து புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அந்த புதிய கார்களுக்கு 95 சதவீதம் இந்திய உதிரிபாகங்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
சிறு தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் பேசிய ஜெனரல் மோட்டார்ஸ் உதிரிபாகங்கள் சப்ளை பிரிவு துணைத் தலைவர் அஸ்வானி கூறுகையில்," புதிதாக அறிமுகப்படுத்தப்படும் கார்களுக்கு உள்நாட்டு உதிரிபாகங்களின் அளவை 95 சதவீதம் உயர்த்த திட்டமிட்டு இருக்கிறோம்," என்றார்.
உள்நாட்டு உதிரிபாகங்களை பயன்படுத்துவதன் மூலம், கார்களை சரியாகவும், குறைந்த விலையிலும் விற்க முடியும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








