அறிமுகமாகி ஒரே மாதத்தில் 250 புளூயன்ஸ் விற்பனை

இந்திய சந்தையில் இரண்டாவது இன்னிங்சை துவங்கியுள்ள ரினால்ட் நிறுவனம் கடந்த மாதம் தனது போர்ட்போலியோவில் முதலாவதாக புளூயன்ஸ் செடான் காரை களமிறக்கியது.
வாடிக்கையாளர் மத்தியில் இந்த காருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 250 கார்கள் விற்பனையாகி உள்ளது.
இந்த காருக்கு ரினால்ட் நிறுவனம் 4 ஆண்டுகள் அல்லது 80,000 கிமீ வாரண்டியும், 20,000 கிமீ வரையிலான இலவச சர்வீஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது.
தவிர, வாடிக்கையாளர்கள் பயன்பெறும் விதத்தில் 24 மணிநேர தொலைபேசி உதவி மையத்தையும் ரினால்ட் திறந்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வந்துள்ள புளூயன்ஸ் காரின் வசதிகளும், வடிவமைப்பும் மார்க்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புளூயன்ஸ் விற்பனை அதிகரித்துள்ளதால், ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிவிக், ஃபியட் லீனியா, டொயோட்டோ கரொல்லா அல்டிஸ் ஆகிய கார்களுக்கு கடும் சந்தை போட்டி ஏற்பட்டுள்ளது.
ரூ.12.99 லட்சம் முதல் ரூ.14.40 வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








