இந்தியாவில் 72,000 சிட்டி கார்களை திரும்பபெறுவதாக ஹோண்டா அறிவிப்பு

கடந்த 2005ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை சிட்டி கார்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என ஹோண்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, எந்த புகார்களும் வராத நிலையில், தனது நிறுவனத்தின் தர கொள்கைகளின்படி முன்னெச்சரிக்கையாக இந்த திரும்ப பெறும் நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக ஹோண்டா விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி தகவல் அனுப்பப்படும் என்றும் ஹோண்டா சியல் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
திரும்பபெறப்பட இருக்கும் இரண்டாம் தலைமுறை சிட்டி கார்களில் புதிய பவர் விண்டோ ஸ்விட்சுகளை இலவசமாக மாற்றித்தரப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








