டீசல் மாடல்களை அறிமுகம் செய்ய ஜிஎம் திட்டம்

பெட்ரோல் விலை உயர்வால் கார் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கார் விற்பனையை அதிகரிக்க அனைத்து முன்னணி நிறுவனங்களும் பல்வேறு உபாயங்களை கையாண்டு வருகின்றன.
இந்த நிலையில், கார் விற்பனையை அதிகரிக்க தனது அனைத்து சிறிய கார் மாடல்களிலும் டீசல் எஞ்சினை பொருத்தி அறிமுகம் செய்ய ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
இதில், முதலாவதாக 1.0 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட பீட் கார் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இதைத்தொடர்ந்து, ஸ்பார்க் மற்றும் ஏவியோ ஹேட்ச்பேக் கார்களிலும் டீசல் மாடலை அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம், தனது கார் விற்பனையை கணிசமாக உயர்த்த முடியும் என்று ஆணித்தரமாக நம்புகிறது ஜெனரல் மோட்டார்ஸ்.
தவிர, இந்தியாவில் தயாராகும் டீசல் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








