சென்னை தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை அதிகரித்தது பிஎம்டபிள்யூ

சொகுசு கார் தயாரிப்பில் உலகப்புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ நிறுவனம், சென்னையில் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. பிஎம்டபிள்யூவின் 3 சீரி்ஸ்,5 சீரி்ஸ் செடான் ரக சொகுசு கார்கள் மற்றும் X1 எஸ்யூவீ கார்கள் சென்னை தொழிற்சாலையில், அசெம்பிள் செய்யப்படுகின்றன.
இந்தியாவில் பிஎம்டபிள்யூ கார்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 6,246 கார்களை விற்பனை செய்து, இந்திய சொகுசு கார் சந்தையில் முதலிடம் பிடித்தது. விற்பனை கொடுத்த உற்சாகத்தை தொடர்ந்து இந்த ஆண்டு விற்பனையை இரு மடங்கு உயர்த்த பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. மேலும், புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
இதற்கு ஏதுவாக, ஆண்டுக்கு 8,000 கார்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட சென்னை கார் தொழிற்சாலையின் கார் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 10,000 கார்களாக பிஎம்டபிள்யூ அதிகரித்துள்ளது. கடந்த 1ந் தேதி முதல் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ வெளியிட்ட அறிக்கையில்ே தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








