விற்பனை வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள வோக்ஸ்வேகனின் புதிய திட்டம்

ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் நிறுவனம்,கடந்த ஆண்டு இந்தியாவில் 32,000 சொகுசு கார்களை விற்பனை செய்துள்ளது.வோக்ஸ்வேகனின் போலோ மற்றும் வென்ட்டோ மாடல்களுக்கு இந்தியாவி்ல் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
எதிர்பாராத விற்பனை வளர்ச்சியை எட்டியதைத்தொடர்ந்து உற்சாகத்தில் இருக்கும் வோக்ஸ்வேகன் அடுத்தடுத்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.மேலும்,விற்பனையில் சீரான வளர்ச்சியை பெறும் வகையில் புதிய விற்பனை கொள்கையை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வோக்ஸ்வேகன் இந்தியா குழுமத்தின் தலைவர் கூறியதாவது:
"குறுகிய காலத்தில் வோக்ஸ்வேகன் கார்கள் இந்திய சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது.கடந்த ஆண்டு 32,000கார்கள் விற்பனை செய்யப்பட்டன.இதில்,போலோ, வென்ட்டோ கார்களின் விற்பனை முன்னிலை வகித்தன.
ஆண்டுக்கு 15 சதவீதம் வீதம்,அடுத்த ஐந்து ஆண்டுகளில் சீரான விற்பனை வளர்ச்சியை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம்.மேலும்,அடுத்த ஆறு முதல் ஏழு ஆண்டுகளி்ல் இந்திய கார் விற்பனை சந்தையில் 20சதவீத இடத்தை பிடிக்கவும் திட்டமிட்டுள்ளோம்,"என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








