இந்தியாவில் எஸ்6 செடான், க்யூ-3 எஸ்யூவியை அறிமுகம் செய்யும் ஆடி

இந்திய மார்க்கெட்டில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க ஆடி முடிவு செய்துள்ளது. இதனால், தனது எதிர்கால திட்டங்களை ஒத்திப்போடாமல் விரைவாக செயல்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
2015ம் ஆண்டிற்குள் தனது நம்பர் ஒன் இலக்கை எட்டுவதற்காக புதிய மாடல்களை அறிமுகம் செய்ய ஆடி திட்டமிட்டுள்ளது.
இந்த வரிசையில், தனது எஸ்6 செடான் மற்றும் க்யூ3 எஸ்யூவியை அடுத்த ஆண்டு இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதனிடையே, டெல்லியில் நடைபெற உள்ள ஆட்டோ கண்காட்சியில் இந்த இரண்டு புதிய மாடல்களையும் பார்வைக்கு வைக்கவும் ஆடி முடிவு செய்துள்ளது.
புதிய மாடல்கள் வரவால் அடுத்த ஆண்டு 40 சதவீத விற்பனை வளர்ச்சியை எட்டவும் அந்த நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








