மேலும் ஒரு நானோ கார் தீப்பிடித்து எரிந்தது: டெல்லியில் சம்பவம்

டெல்லி, கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் நிசாந்த்(25). இவர் நேற்றிரவு தனது சகோதரி சுமாவுடன்(35) வீட்டிலிருந்து கன்னாட் ப்ளேஸ் நோக்கி தனது நானோ காரில் சென்று கொண்டிருந்தார்.
வருமான வரித்துறை அலுவலகம் அமைந்துள்ள பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது காரில் இருந்து புகை வந்துள்ளது. இதையடுத்து, காரை உடனடியாக நிறுத்திவிட்டு இருவரும் அவசரமாக கீழே இறங்கிவிட்டனர்.
அடுத்த சில நிமிடங்களில் கார் தீப்பற்றி எரியத்துவங்கியது. இதுகுறித்து, தகவலறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களை கொண்டு காரில் பற்றிய தீயை 15 நிமிடங்கள் போராடி அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் நிஷாந்தும், அவரது சகோதரியும் மயிரிழையில் உயிர் தப்பினர். குஜராத், இலங்கை, சென்னை என்று அடுத்தடுத்து நானோ கார் தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், டெல்லியிலும் ஒரு நானோ கார் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








