வங்கதேசத்திலிருந்து அசோக் லேலண்டுக்கு ரூ.105 கோடி பல்க் ஆர்டர்

அசோக் லேலண்டின் தரமான தயாரிப்புகளுக்கு வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பு உள்ளது. இதனால், வெளிநாட்டு வர்த்தக வாய்ப்புகளை நேரடியாக பெறுவதில் லேலண்ட் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், 290 டபுள் டெக்கர் பஸ்களை தயாரித்து வழங்குமாறு வங்கதேச போக்குவரத்து கழகத்திடமிருந்து அசோக் லேலண்டுக்கு ரூ.105 கோடி மதிப்புடைய பல்க் ஆர்டர் கிடைத்துள்ளது.
இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் வங்கதேச தலைநகர் டாக்காவில் கையெழுத்தானது. வங்கதேச போக்குவரத்து கழக தலைவர் எம்.எம்.இக்பால் மற்றும் அசோக் லேலண்ட் சர்வதேச விவகாரங்களுக்கான சிறப்பு இயக்குனர் ஆன்டனி லோபோ ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து, டபுள் டெக்கர் பஸ்களை விரைந்து தயாரித்து டெலிவிரி கொடுக்க திட்டமிட்டிருப்பதாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








