கடந்த ஆண்டில் இந்தியாவில் 9 கோடி வாகனங்கள்:ஏ.ஆர்.ஏ.ஆ. இயக்குனர் தகவல்

உலகில் வேகமாக வளரும் இரண்டாவது ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா மாறியுள்ளது. நாளுக்கு நாள் புதிய வாகனங்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு நடத்திய ஆய்வுகளின்படி நாட்டில் மொத்தம் 8.93 கோடி வாகனங்கள் இருப்பதாக ஏ.ஆர்.ஏ.ஐ. இயக்குனர் ஸ்ரீகாந்த் மராத்தே தெரிவித்தார்.
இதில், 35 சதவீதம் அளவிற்கு டீசல் வாகனங்கள் இருப்பதாக அவர் கூறினார். மேலும், ஆட்டோமொபைல் துறையின் தற்போதைய வளர்ச்சியை வைத்து கணக்கிடும்போது, வரும் 2015ம் ஆண்டில் நாட்டின் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 12.13 கோடியாக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில், சி.என்.ஜி. மற்றும் எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும் கூறிய அவர் அதிக மைலேஜ் தரும் வகையிலும், குறைந்த கார்பன் வெளியிடும் வகையிலும் டீசல் எஞ்சின் தொழில்நுட்பத்தை உருவாக்கவும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications








