வாகனங்களின் விலையை ஒரு சதவீதம் உயர்த்தியது அசோக் லேலண்ட்

ஹிந்துஜா குழுமத்தின் அங்கமாக செயல்படும் அசோக் லேலண்ட் நிறுவனம் கனரக வாகன தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. பஸ், டிரக், மினிடிரக் உள்ளிட்ட வாகனங்களை தயாரித்து வரும் லேலண்ட் இந்திய கனரக வாகன சந்தையில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், ஸ்டீல், ரப்பர் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்நது வருவதால், அனைத்து வாகனங்களின் விலையையும் ஒரு சதவீதம் உயர்த்தியுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. விலையை உயர்த்தினாலும் இந்த ஆண்டு தனது விற்பனை 5 முதல் 7 சதவீதம் வளர்ச்சி காணும் என லேலண்ட் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








