விரைவில் கார்களின் விலையை உயர்த்த ஆடி முடிவு

சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனம் இந்தியா சொகுசு கார் மார்க்கெட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேலும், ஆடி கார்கள் இந்தியர்கள் மத்தியில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய ரூபாயின் வீழ்ச்சி அந்த நிறுவனத்தை வெகுவெகாவே பாதித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பாகங்களுக்கான செலவீனம் பன்மடங்கு உயர்ந்துள்ளதால் பிற வெளிநாட்டு நிறுவனங்கள் போலவே ஆடியும் கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
வரும் ஆண்டு துவக்கத்தில் 2 சதவீதம் வரை கார்களின் விலையை உயர்த்த ஆடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ஆடி நிறுவனம் ரூ.27.69 லட்சம் முதல் ரூ.1.50 கோடி வரையிலான விலைகளில் கார்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








