இயற்கை எரிவாயுவில் இயங்கும் வால்வோ பஸ்: சோதனைகள் தீவிரம்

சொகுசு பஸ் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக வால்வோ திகழ்கிறது. டீசலில் இயங்கும் பஸ்களை தயாரித்து வரும் இந்நிறுவனம்,முதன்முறையாக இயற்கை எரிவாயுவில் இயங்கும் பஸ்களை தயாரித்துள்ளது.
நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில்,இந்த பஸ்களை அறிமுகப்படுத்த இருப்பதாக வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வால்வோ நிறுவன தலைவர் கூறியதாவது:
சிஎன்ஜி பஸ்களுக்கான இறுதிகட்ட சோதனைகள் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.வரும் ஜுலை-செப்டம்பர் மாதங்களுக்கு இடையிலான காலாண்டில் இந்த பஸ்களை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, டெல்லி மற்றும் மும்பையில் 8,400 பஸ்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
டீசலில் இயங்கும் பஸ்களை விட, சிஎன்ஜி பஸ்களின் விலை 15 முதல் 20 சதவீதம் கூடுதலாக இருக்கும்.இதுதவிர,பேட்டரி மற்றும் டீசலில் இயங்கும், இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட பஸ்களை தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடக்கிறது. இந்த பஸ்கள் மூலம் 40 சதவீதம் வரை எரிபொருள் செலவீனத்தை மிச்சப்படுத்தலாம்.
மேலும், பஸ் தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படும். இதன்மூலம், சீனா,மெக்சிகோ,ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்ததாக வால்வோ பஸ்களின் முக்கிய சந்தையாகவும், பஸ்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம்பெறும்,என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








