ரூ.4 லட்சத்தில் புதிய கார் அறிமுகத்தை ஒத்திவைக்கும் ஃபியட்

இந்தியாவில் சிறிய கார்களுக்கு இருக்கும் தேவையை கருத்தில்க்கொண்டும், மார்க்கெட் பங்களிப்பை உயர்த்திக்கொள்ளும் வகையிலும் புத்தம் புதிய சிறிய காரை அறிமுகப்படுத்த ஃபியட் முடிவு செய்துள்ளது.
ஃபியட் நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் புன்ட்டோ ஹேட்ச்பேக் காரைவிட குறைந்த விலையிலும், 1.0 லிட்டர் எஞ்சின் கொண்டதாக வரும் இந்த புதிய காரை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த ஃபியட் திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில், டாடாவிலிருந்து பிரிந்து விரைவில் நாடு முழுவதும் 20 புதிய கார் ஷோரூம்களை திறக்க ஃபியட் முடிவு செய்துள்ளது.
எனவே, புதிய கார் ஷோரூம்கள் திறக்கும் வரை சிறிய கார் அறிமுகத்தை தள்ளிவைக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








