பிகோ விலையை ஒரு சதவீதம் உயர்த்தியது ஃபோர்டு

மூலப்பொருட்களின் விலை உயர்வால் கார்களை தயாரிப்பதற்கான செலவீனம் அதிகரித்துள்ளது. இதனால், முன்னணி நிறுவனங்கள் கார்களின் விலையை உயர்த்தி வருகின்றன. மாருதி, டாடா, டொயோட்டோ,நிசான் ஆகிய நிறுவனங்கள் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ஃபோர்டு நிறுவனமும் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விற்பனையில் முன்னிலை பெற்றுள்ள பிகோ காரின் விலையை ஒரு சதவீதம் உயர்த்தியுள்ளது ஃபோர்டு. பெட்ரோல் மற்றும் டீசல் பிகோ மாடல்களுக்கு இந்த விலை உயர்வு பொருந்தும் என ஃபோர்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஃபோர்டு இந்தியா தலைவர் மைக்கேல் போனிஹாம் கூறுகையில்," உற்பத்தி செலவீனத்தை தாக்கு பிடிக்க முடியாத சூழ்நிலையில், பிகோ விலையை ஒரு சதவீதம் உயர்த்தியுள்ளோம். இதுதவிர, மற்ற மாடல் கார்களின் விலையையும் விரைவில் உயர்த்த வேண்டிய நிலை உள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications








