கார் உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவில் ரூ.2,250 கோடி முதலீடு:ஜெனரல் மோட்டார்ஸ்

அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஆண்டுக்கு 4.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறனை பெறும் வகையில், தொழிற்சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்கிறது ஜெனரல் மோட்டார்ஸ். இதற்காக, ரூ.2,250 கோடி வரை முதலீடு செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த முதலீடுகளுக்கான நிதியை பெறுவதற்காக 5 இந்திய வங்கிகளிடம் கடனுதவி பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக ஜெனரல் மோட்டார்ஸ் தலைவர் தெரிவித்தார். இதற்கான, ஒப்பந்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
மேலும், அமெரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஆசிய பங்குதாரரான சீனாவை சேர்ந்த செயிக் மோட்டார் கார்ப்பரேஷன் ஆகியவை ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக நிதி உதவியை வழங்க உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications








