ஏப்ரலில் ஹோண்டா கார் விற்பனை பாதியாக குறைந்தது

கடந்த ஆண்டு ஏப்ரலில் 3,578 கார்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால், கடந்த ஏப்ரலில் 2,012 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஏப்ரல் மாத விற்பனையை ஒப்பிடுகையில் 43.76 சதவீதம் குறைந்துவிட்டது.
ஹோண்டா துணைத்தலைவர் ஞானேஸ்வர் சென் கூறியதாவது:
"ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உதிரிபாக சப்ளையில் இடர்பாடு ஏற்பட்டதால், நொய்டாவில் உள்ள தொழிற்சாலையில் கார் உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கார் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வரும் ஜூலை மாதத்தில் உதிரிபாக சப்ளையில் ஏற்பட்டுள்ள தொய்வு நீங்கி, கார் உற்பத்தி மீண்டும் சீரடையும் என்று கருதுகிறோம். உற்பத்தி பழைய நிலைக்கு திரும்பியவுடன் இழந்த இடத்தை மீண்டும் பிடிப்போம்," என்றார்.


Click it and Unblock the Notifications








