வெள்ளத்தில் மூழ்கிய 1,400 புதிய கார்களை அழிக்க ஹோண்டா முடிவு

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் தாய்லாந்தில் உள்ள தொழிற்சாலையிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு உதிரிபாகங்களையும், கார்களையும் ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன் தாய்லாந்தில் ஏற்பட்ட வரலாறு வெள்ளத்தில் அந்நாட்டின் அயுதயா என்ற இடத்தில் உள்ள ஹோண்டா ஆலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆலையின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 1,400 புதிய சிட்டி மற்றும் பிரியோ கார்கள் வெள்ளத்தில் மூழ்கின.
நீண்ட நாட்களாக வெள்ள நீரில் அவை மூழ்கி இருந்ததால், அனைத்து கார்களும் விற்பனைக்கு ஏற்ற தர நிலையை இழந்துள்ளன. இதனால், அந்த 1,400 கார்களையும் அழித்து விட ஹோண்டா முடிவு செய்துள்ளது.
கடந்த மார்ச்சில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் கடும் இழப்பை சந்தித்த ஹோண்டா, தற்போது தாய்லாந்து வெள்ளத்தாலும் அதிக இழப்பை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








