ரூ. 400 கோடியில் இந்தியாவில் ஹுன்டாய் டீச்ல் என்ஜின் தொழிற்சாலை

இது குறி்த்து அவர் கூறியதாவது,
உள்ளூர் சந்தை பயன்பாட்டிற்காக புதிய தொழிற்சாலையில் 1.1 லி, 1. 4 லி மற்றும் 1.6 லி என 3 வகை என்ஜின்கள் தயாரிக்கப்படும். ரூ. 400 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் அந்த தொழிற்சாலையில் வரும் 2013 மற்றும் 2014ல் உற்பத்தி துவங்கும். புதிய என்ஜின்கள் ஏற்கனவே உள்ள சில மாடல்கள் தவிர்த்து புது மாடல் கார்களுக்கே பயன்படுத்தப்படும். ஹுன்டாய் வெர்னா மற்றும் ஐ10 கார்களில் உள்ள என்ஜின்கள் கொரியாவில் உள்ள ஹுன்டாய் தொழிற்சாலையில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கூடுதல் முதலீட்டில் இந்த ஆண்டு உற்பத்தியை 6. 3 லட்சத்தில் இருந்து 6.7 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதில் இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து மாடல்களும் அடக்கம் என்றார்.
இது குறி்த்து ஹூன்டாய் நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பரப் பிரிவு தலைவர் கூறியதாவது,
கடந்த ஆண்டு 5. 6 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. இதன் அடிப்படையில் இந்த ஆண்டின் இலக்கு 6.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உள்ளூர் சந்தையில் அதிக கிராக்கி இருந்தது. 2011ல் உள்ளூர் சந்தையில் மட்டும் 4 லட்சம் கார்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம். ஹுன்டாயின் புதிய தயாரிப்பான பார்க் 2011 அல்லது 2012-ம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகமாகலாம். இது சான்ட்ரோ போன்று 800 சிசி என்ஜின் கொண்டது என்றார்.


Click it and Unblock the Notifications








