ஐ-30 ஹேட்ச்பேக் காரின் சிறப்பம்ங்கள்: ஹூண்டாய் வெளியிட்டது

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐ-10 மற்றும் ஐ-20 கார்கள் மார்க்கெட்டில் வெற்றிகரமான மாடல்களாக திகழ்கின்றன. இந்த வரிசையில், ஐ-30 மாடலை கடந்த 2007ம் ஆண்டு ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தியது ஹூண்டாய்.
கடந்த ஆண்டு மட்டும் 1.15 லட்சம் ஐ-30 கார்கள் ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய சந்தையில் அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையையும் ஐ-30 பெற்றுள்ளது.
இந்த நிலையில், அடுத்த தலைமுறை அம்சங்களுடன் கூடிய புதிய ஐ-30 காரை ஹூண்டாய் வடிவமைத்துள்ளது.
வரும் 13ந் தேதி பிராங்பர்ட் நகரில் துவங்க இருக்கும் பிரம்மாண்ட மோட்டார் ஷோவில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
அறுங்கோண வடிவம் கொண்ட முன்பக்க கிரில், ஆபரணம் போன்ற ஹேட்லைட்ஸ் வடிவமைப்பு, பகல்நேர ரன்னிங் விளக்குகள் உள்ளிட்ட புதிய மாற்றங்களுடன் ஐ-30 வருகிறது. இந்த கார் நிச்சயம் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.
இந்தியாவில் ஐ-10 மற்றும் ஐ-20 கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. இந்த நிலையில், ஐ-30 காரை இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த கார் ரூ.7லட்சம் முதல் ரூ.8 லட்சம் விலை பட்டியலில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று ஆட்டோ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








