ரூ.2.5 லட்சத்தில் புதிய 800சிசி காரை அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டம்

டாடா நானோ மற்றும் மாருதி ஆல்ட்டோ இடையிலான இடைவெளியை நிரப்பும் வகையில் புதிய 800சிசி காரை ஹூண்டாய் மோட்டார்ஸ் வடிவமைத்துள்ளது. இயோன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் மிகக்குறைந்த விலையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானதால், அதன் மீதான எதிர்பார்ப்பு வாடிக்கையாளர் மத்தியில் அதிகரித்து வருகிறது.
வரும் அக்டோபர் 10 ந்தேதி முதல் 15 ந்தேதிக்குள் இயோனை அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் இந்த காரை ரூ.2.50 லட்சம் முதல் ரூ.2.60 லட்சம் விலையில் அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
குறைந்த விலையில் வரும் இந்த கார் ஆல்ட்டோ போன்று 3.5 மீட்டர் நீளம் கொண்டதாக இருந்தாலும், உயரத்தில் 75 மிமீ, அகலத்தில் 40 மிமீ கூடுதலாகவும் புளூயிடிக் ஸ்கல்ப்ச்சர் டிசைன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், கேபின் அதிக இடவசதி கொண்டதாகவும், அதிக பொருட்கள் வைக்கும் லக்கேஜ் அறையுடனும் வர இருக்கிறது.
மேலும், இதில் பொருத்தப்பட்டிருக்கும் 815 சிசி எஞ்சின் லிட்டருக்கு 21.1 கிமீ மைலேஜ் தரும் வகையிலும் இருக்கும் என்று ஹூண்டாய் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இயோன் மீதான வாடிக்கையாளர்களுக்கு மட்டமின்றி ஆட்டோத்துறையினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








