கார்களின் விலையை ரூ.15,000 வரை உயர்த்துகிறது மஹிந்திரா

Mahindra Scorpio
டெல்லி: உற்பத்தி செலவீனத்தை தாக்கு பிடிக்க முடியாததால், கார்களின் விலையை ரூ.15,000 வரை உயர்த்துவதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

கார் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை அதிகரித்ததால், கடந்த ஜனவரி மாதம் பெரும்பாலான கார் நிறுவனங்கள் கார்களின் விலையை கடுமையாக உயர்த்தின. இதனால், வருவாய் இழப்பில் இருந்து ஓரளவு தப்பியதாக கார் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அடுத்தடுத்து விலை உயர்வு அறிவிப்பை கார் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன . இந்த வரிசையில், மஹிந்திரா நிறுவனமும், கார் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மஹிந்திரா ஆட்டோ தலைவர் பவன் கோயங்கோ கூறியதாவது:

"உற்பத்தி செலவீனத்தை தாக்குமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், கார் விலையை மீண்டும் உயர்த்துகிறோம். ஸ்கார்ப்பியோ, பொலிரோ மற்றும் லோகன் கார்களின் விலையை 1.5 முதல் 2 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளோம்.

இதனால், குறைந்தது ரூ.7,000 முதல் ரூ.15,000 வரை மாடலுக்கு தகுந்தாற்போல் கார்கள் விலை உயரும். விற்பனையை பாதிக்காத வகையில் விலை உயர்வை அறிவித்துள்ளோம்," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Sunday, April 10, 2011, 14:42 [IST]
English summary
Auto major Mahindra & Mahindra has raised the prices of its entire range of vehicles by up to Rs 15,000. “We have hiked the prices last week by 1.5 to 2 per cent on all our vehicles due to higher commodity costs,” the Mahindra and Mahindra President told reporters. The price hike will vary between Rs 7,000 and Rs 15,000 on different models, he added.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+