உற்பத்தி நெருக்கடி: புதிய எஸ்யூவி புக்கிங்கை நிறுத்தியது மஹிந்திரா

கடந்த மாதம் 28ந் தேதி அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா புதிய எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியி்ல் எதிர்பாராத வரவேற்பை பெற்றுள்ளது.
எக்ஸ்யூவி-500 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய எஸ்யூவி 10 நாட்களில் புக்கிங் 8,000ஐ தொட்டுள்ளது.
இந்த நிலையில், மஹிந்திரா மாதம் 2,000 எஸ்யூவியை மட்டும் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. இதை ஒப்பிடும்போது புக்கிங் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்தால் டெலிவிரி கொடுப்பதில் பிரச்னை ஏற்படும் என்று அந்த நிறுவனம் கருதியது.
இதையடுத்து, உற்பத்தி நெருக்கடியை கருத்தில்க்கொண்டு புதிய எஸ்யூவிக்கான புக்கிங்கை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது மஹிந்திரா.
சென்னை, பெங்களூர் உள்பட 5 நகரங்களிலும் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளதாக மஹிந்திரா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








