அறிமுகமாகி 2 நாளில் 6,000 மஹிந்திரா புதிய எஸ்யூவி புக்கிங்

சர்வதேச மார்க்கெட்டிற்கு செல்லும் வகையில் புதிய குளோபல் எஸ்யூவி காரை மஹிந்திரா கடந்த மாதம் 28ந் தேதி அறிமுகப்படுத்தியது. ரூ.15 லட்சத்தில் வரும் என்று ஆட்டோ வட்டாரங்கள் பரபரத்த நிலையில் ரூ10.80 லட்சம் என்ற விலையில் புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்தி மார்க்கெட்டில் கிடுகிடுக்க வைத்தது மஹிந்திரா.
எக்ஸ்யூவி-500 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய எஸ்யூவியில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும், அட்டகாசமான வடிவமைப்பும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால், அறிமுகமாகி முதல் 2 நாளில் மட்டும் 6,000 எக்ஸ்யூவி-500 புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக மஹிந்திரா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்த விலையில் தரமான கட்டமைப்பு மற்றும் வசதிகளுடன் வந்துள்ள இந்த எஸ்யூவி விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டும் என்றும் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








