உற்பத்தி இலக்கை உயர்த்த 7வது தொழிற்சாலையை அமைக்க மாருதி திட்டம்

Maruti Plant
டெல்லி: 2015-16ம் ஆண்டில் ஆண்டுக்கு 30 லட்சம் கார்கள் உற்பத்தி என்ற இலக்கை எட்டுவதற்கு ஏதுவாக, மேலும் ஒரு புதிய தொழிற்சாலையை அமைக்க மாருதி திட்டமி்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி, கார் சந்தையில் 50 சதவீத இடத்தை பிடித்து கொண்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு கார் சந்தையும் அபார வளர்ச்சி கண்டு வருவதற்கு ஏற்ப, தனது உற்பத்தியையும் அதிகரித்து வருகிறது மாருதி.

இதற்காக, மானேசரில் புதிதாக இரண்டு தொழிற்சாலைகளை கட்டி வருகிறது மாருதி. இந்த தொழிற்சாலைகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் உற்பத்தியை துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைகள் செயல்பட துவங்கியவுடன் மாருதியின் ஆண்டு உற்பத்தி 17 லட்சமாக அதிகரிக்கும்.

இந்நிலையில், வரும் 2015ம் ஆண்டில் நாட்டின் கார் உற்பத்தி 50 லட்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது, தனது உற்பத்தியை 25 லட்சம் முதல் 30 லட்சமாக உயர்த்தும் வகையில் புதிய தொழிற்சாலையை அமைக்க மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய தொழிற்சாலை அமைப்பது குறித்து மாருதி தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதுகுறித்த இறுதி முடிவை அந்நிறுவனம் எடுக்கும் என்றும் ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, April 18, 2011, 12:51 [IST]
English summary
Maruti Suzuki India is considering to set up a new plant, as it aims to sell up to 30 lakh units every year by 2015-16. According to sources close to the development, the firm has already started internal discussions to set up its 7th plant and a final decision to this effect is likely to be taken within the next one year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+