பழைய தொழிலாளர்களுக்கு பதில் புதிய தொழிலாளர்கள்: மாருதி முடிவு

மானசேரில் உள்ள மாருதி ஆலை தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் 15வது நாளை எட்டியுள்ளது. தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையிலான நன்னடத்தை பத்திர பிரச்னையில் சுமூக தீர்வு எட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை சென்று கொண்டிருக்கிறது.
அந்த ஆலையில் கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மாருதிக்கு பல்வேறு வகையில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு பதில் புதிய தொழிலாளர்களை நியமிக்க மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மானேசர் ஆலையில் தற்போது 2,500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதில், 1,000 பேர் நிரந்தர தொழிலாளர்கள். அவர்களுக்கு பதில் புதிய தொழிலாளர்களை நியமிக்க மாருதி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








