Just In
- 35 min ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 54 min ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 1 hr ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மாருதி தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்:கார் உற்பத்தி பாதிப்பு
ஹரியானா மாநிலம், மானேசரில் ரூ.3,625 கோடியில் மாருதி நிறுவனம் புதிய கார் தொழிற்சாலையை கட்டியுள்ளது. சமீபத்தில் உற்பத்தியை துவங்கிய இந்த தொழிற்சாலையில் 2,500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த நிலையில், மானேசர் தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்கள் மாருதி சுஸுகி எம்ப்ளாயீஸ் யூனியன் (எம்எஸ்இயூ)என்ற பெயரில் புதிய தொழிற்சங்கத்தை துவங்கியுள்ளனர். ஆனால், இதற்கு மாருதி நிர்வாகம் அனுமதி தரவில்லை என்று தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் தர வலியுறுத்தியும் மானேசர் தொழிற்சாலையை சேர்ந்த பெரும்பாலான தொழிலாளர்கள் கடந்த சனிக்கிழமை முதல் திடீர் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதனால், அந்த தொழிற்சாலையில் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் ஒருவர் கூறுகையில்,"குர்கானில் உள்ள தொழிற்சாலையில் செயல்படும் பழைய தொழிற்சங்கத்தின் கீழ் எங்களை செயல்படுமாறு எங்களிடம் நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக எழுதி தர வற்புறுத்துகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் தர வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்," என்றார்.
தொழிலாளர்களுடன் மிகுந்த நட்பு பாராட்டி வருவதாக கூறிவரும் மாருதி நிறுவனத்தின் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது அந்த நிறுவனத்துக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த சனிக்கிழமை மட்டும் சுமார் 650 கார்களின் உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும், மாருதி நிர்வாகத்துக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!