வரும் 1ந் தேதி முதல் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விலை உயர்வு

Mercedes Benz Logo
டெல்லி: உற்த்தி செலவீனம் அதிகரித்துள்ளதால் கார்களின் விலையை வரும் 1ந் தேதி முதல் உயர்த்துவதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கார் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல முன்னணி நிறுவனங்கள் கார் விலையை உயர்த்தி வருகின்றன. இந்த வரிசையில், சொகுசு கார் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் இணைந்து கொண்டுள்ளது.

இதுகுறித்து மெர்சிடிஸ் பென்ஸ் மேலாண் இயக்குனர் பீட்டர் ஹோனேக் கூறியதாவது:

"மூலப்பொருட்களின் விலை உயர்வு, பணமாற்று மதிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் எங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க விலையேற்றத்தை கையில் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, வரும் 1 ந் தேதி முதல் கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளோம்," என்றார்.

ஆனால்,கார்களின் விலையை எத்தனை சதவீதம் உயர்த்தப்படும் என்பது குறித்த தகவலை பீட்டர் ஹோனேக் தெரிவிக்கவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 27, 2011, 11:58 [IST]
English summary
Mercedes-Benz's Indian subsidiary Tuesday said it would hike the prices of its car models from May 1 due to rising input costs and challenging exchange rates.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+