திருச்சி புதிய தொழிற்சாலையில் விரைவில் டயர் உற்பத்தி-எம்.ஆர்.எப்.

நாட்டின் மிகப்பெரிய டயர் தயாரிப்பு நிறுவனமாக திகழும் எம்.ஆர்.எப்., தனது உற்பத்தி திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. எம்.ஆர்.எப்.க்கு நாடு முழுவதும் 6 தொழிற்சாலைகள் உள்ளன.
இவற்றில், அனைத்து ரக வாகனங்களுக்கும் தேவையான டயர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையி்ல், திருச்சியில் புதிதாக டயர் தொழிற்சாலையை அமைத்துள்ளது எம்.ஆர்.எப். நிறுவனம்.
ரூ.900 கோடியில் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழிற்சாலையில் டிரக் மற்றும் கார்களுக்கான ரேடியல் டயர்களை தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் எம்.ஆர்.எப். நிறுவனத்தின் அங்கீரிக்கப்பட்ட முதல் ஒருங்கிணைந்த விற்பனை மற்றும் சர்வீஸ்க்கான புதிய மையத்தின் திறப்பு விழா நடந்தது.
இதில், கலந்துகொண்ட எம்.ஆர்.எப். நிறுவனத்தின் பொதுமேலாளர் ரஜத் என்.நாங்கியா "திருச்சியில் கட்டப்பட்டுள்ள புதிய தொழிற்சாலையில் விரைவில் உற்பத்தி துவங்க இருப்பதாக தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








