சென்னை ஆலையில் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் நிஸ்ஸான்

இதையடுத்து அங்கு தற்போது வருடத்திற்கு 2 லட்சமாக உள்ள உற்பத்தி 4 லட்சமாக அதிகரிக்கவுள்ளது.
இதற்கான முன்னோட்டப் பணிகளை நிஸ்ஸான் முடுக்கி விட்டுள்ளது. நிஸ்ஸான் மற்றும் ரெனால்ட் நிறுவனம் கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டன. அதைத் தொடர்ந்து ஓரகடத்தில் ஆலை உருவாக்கப்பட்டது. தற்போது இங்கு 3200 பேர் பணியாற்றுகின்றனர். இரு நிறுவனங்களும் இணைந்து இங்கு ரூ. 4500 கோடி முதலீட்டை செய்துள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிருந்து மைக்ரா கார் வெளி வந்தது. தற்போது உற்பத்தியை இரட்டிப்பாக்கும் நடவடிக்கைகளில் நிஸ்ஸான் இறங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








