வரும் அக்டோபர் 7ந் தேதி புதிய செடான் காரை அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா

பில்டு குவாலிட்டியில் ஸ்கோடா கார்கள் தனி மதிப்பையும், அந்தஸ்தையும் பெற்றுள்ளன. எனவே, சந்தையின் வளர்ச்சியின் தக்கவாறு புதிய எலக்ட்ரி்க் கார்களை ஸ்கோடா களமிறக்கி வருகிறது. ஆக்டாவியாவுக்கு பதிலாக
புதிய லாராவை சமீபத்தில் களமிறக்கிய அந்த நிறுவனம் வரும் அக்டோபர் 7 ந்தேதி புதிய மிட்சைஸ் செடான் காரான லாரேட்டாவை அறிமுகம் செய்கிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சி செக்மெண்டில் இறங்கும் லாரேட்டாவில் வோக்ஸ்வேகன் வென்ட்டோ காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.6 லிட்டர் எஞ்சினுடன் வருகிறது. இரண்டு எஞ்சின்களுமே சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வர இருக்கிறது.
தவிர, ஏர்பேக்ஸ், ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம்(ஏபிஎஸ்), எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் ட்ஸ்ட்ரிபியூஷன் ஆகிய ஸ்டான்டர்டு அம்சங்களை லாரேட்டா கொண்டிருக்கும். மேலும், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் லாரேட்டாவை புதிய பெயரில் அறிமுகம் செய்யவும் ஸ்கோடா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த கார் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா ஆகிய கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் வகையில் ரூ.7 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் மார்க்கெட் பரபரக்கிறது.


Click it and Unblock the Notifications








