மூன்றாவது காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிகர லாபம் 2.46%உயர்வு

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ்,நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்கான (அக்டோபர்-டிசம்பர்)வரவு செலவு அறிக்கையை நேற்று வெளியிட்டது.அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கடந்த ஆண்டு டிசம்பர் மாத்துடன் முடிந்த,நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நிகர லாபமாக ரூ410கோடி கிடைத்துள்ளது.இது கடந்த நிதி ஆண்டின் இதே காலத்துடன் (ரூ.400.14கோடி)ஒப்பிடும்போது 2.46 சதவீதம் உயர்ந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில்,1,94,085 வாகனங்கள் விற்பனையாதன் மூலம் ரூ.11,458.95 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,65,413 விற்பனை செய்யப்பட்டு ரூ.8,923.99 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
நடப்பு நிதி ஆண்டின் இந்த மூன்றாவது காலாண்டில் மூலப்பொருட்களுக்கு ரூ.6,498.97 கோடியும்,கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.4,975.29 கோடியும் செலவிடப்பட்டது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








