இந்த ஆண்டில் 1,400 பேரை வேலைக்கு அமர்த்த டொயோட்டோ திட்டம்?

ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ நிறுவனம் வாகன தயாரிப்பில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக திகழ்கிறது. வாகன விற்பனை வளர்ச்சிக்கண்டு வருவதையடுத்து, உற்பத்தியை உயர்த்தும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக 800 முதல் 900 பேரை டொயோட்டோ புதிதாக வேலைக்கு அமர்த்தி வருகிறது.
இந்நிலையில், டொயோட்டோவில் எஞ்சினியர்கள் பற்றாக்குறை காரணமாக, எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி தயாரிப்பில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, இந்த ஆண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின் கூடுதலாக எஞ்சினியர்களை பணிக்கு அமர்த்த டொயோட்டோ திட்டமிட்டுள்ளது.
ஜப்பானிலிருந்து வெளிவரும் பிரபல வர்த்தக நாளிதழில் இந்த செய்தி வெளியாகி உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் எலக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு பன்மடங்கு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதி்ல் தீவிரம் காட்டி வருகிறது.
எனவே,எலக்ட்ரிக் கார் உற்பத்தியை பெருக்கும் வகையில் இந்த ஆண்டு 1,400 எஞ்சினியர்களை பணியமர்த்த டொயோட்டோ திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், எலக்ட்ரிக் கார் சந்தையில் முக்கிய இடத்தை பிடிப்பதற்காக இந்த நடவடிக்கையை டொயோட்டோ மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








