கானாவுக்கு 100 பஸ்களை சப்ளை செய்த லேலண்ட்!

நாட்டின் மிகப் பெரிய கனரக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு வெளிநாட்டிலிருந்து பல்க் ஆர்டர்கள் கிட்டி வருகிறது.
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கானாவிலிருந்து அசோக் லேலண்ட்டுக்கு பல்க் ஆர்டர் கிடைத்தது. இதன்படி, நகரம் மற்றும் நகரங்களுக்கு இடையில் இயக்கும் வகையிலான 100 பஸ்களை அசோக் லேலண்ட் சப்ளை செய்துள்ளது.
மெட்ரோ மாஸ் ட்ரான்சிட் நிறுவனத்திற்கு இந்த பஸ்களை சப்ளை செய்துள்ளது லேலண்ட். இந்த நிறுவனத்தில் கானா அரசுக்கு 45 சதவீத பங்குகள் இருக்கின்றன. இந்த புதிய பஸ்கள் கானாவின் பெரும்பாலான வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பஸ்கள் இடதுபுற டிரைவிங் வசதி கொண்டது. ஒரு பஸ்சில் 57 பேர் பயணம் செய்ய முடியும் என்று அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர், கானா நாட்டின் கழிவு அகற்றுதல் துறைக்கு 160 டிரக்குகளை அசோக் லேலண்ட் சப்ளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








