இந்த ஆண்டு 3 புதிய கார்களை விற்பனைக்கு கொண்டு வரும் ஆடி

ஆடி கார்கள் இந்தியாவில் வெகுவாக பிரபலமாகி வருகிறது. இதனால், ஆடி கார்களின் விற்பனை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், விற்பனையில் அதிகரிக்கும் வகையில், இந்த ஆண்டுக்குள் 3 புதிய கார்களை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஆடி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆடி இந்தியா தலைவர் மைக்கேல் பெர்ஷகே கூறியதாவது:
"எங்களது பிராண்டுக்கு வரவேற்பு அதிகரித்துக்கொண்ட செல்கிறது. விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறோம். கடந்த மாதம் 5,511 கார்களை விற்பனை செய்துள்ளோம்.
விற்பனையை தக்கவைக்கவும், அதிகரிக்கவும் இந்த ஆண்டு 3 புதிய கார் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
இந்த மாதம் டிடி பிரிமியம் காரை விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, ஆடி க்யூ3 எஸ்யூவி மற்றும் எஸ் 6 கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதன்மூலம், எங்களது விற்பனை அதிக ஏற்றம் பெறும் என்று நம்புகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








