ஒரே வாரத்திற்குள் 500 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்கள் புக்கிங் ஆனது
அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள் 500 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. இது அந்த நிறுவனத்துக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
கடந்த மாதம் 27ந் தேதி தனது புதிய தலைமுறை 3 சீரிஸ் காரை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்தது. ஆடியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க ஒரே அஸ்திரமாக கருதி புதிய 3 சீரிஸ் காரை பிஎம்டபிள்யூ விற்பனைக்கு கொண்டு வந்தது.

அனைத்து தரப்பினரையும் கவரும் அம்சங்களுடன் ஸ்போர்ட்லைன், கம்போர்ட் லைன் என்ற இருவித ரகங்களில் புதிய 3 சீரிஸ் வந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வந்திறங்கிய புதிய 3 சீரிஸ் காருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
பிஎம்டபிள்யூ எதிர்பார்த்தது போலவே புதிய 3 சீரிஸ் கார் முன்பதிவிலும் அசத்தியுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள் 500 கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. இதனால், ஆடியால் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து பிஎம்டபிள்யூ மீள்வதற்கு ஓரளவு உதவியுள்ளது.
ரூ.28.9 லட்சம் ஆரம்ப விலையில் புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








